Saturday 23 January 2021

பணச்சடங்கு

ஆசி கந்தராஜா

 

நாகலிங்கம் மாஸ்டர் மனைவியுடன் சிட்னிக்கு வந்து மூன்று மாதமாகிறது. இது அவர்களது முதல் வருகை மட்டுமல்ல முதலாவது விமானப் பறப்பும்கூட. முப்பத்தைந்து வயதைத் தாண்டியும் திருமணமாகாமல் 'டிமிக்கிவிடும் மகனுக்குஒரு கால்க்கட்டுப் போடும் வைராக்கியத்துடன் ஒரு வருஷ விசாவில் சிட்னிக்கு வந்திருக்கிறார்கள். நாகலிங்கம் மாஸ்டர் விரும்பியிருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாகக் குடிபுகுந்துதமிழ் மூத்த பிரசைகள் சங்கம்கலை இலக்கியப் பேரவைதமிழர் கூட்டமைப்புஇந்துக் கோவில்கள் என பல்வேறு தமிழ்சமூகசமைய அமைப்புக்களின் தலைவராகியிருக்க முடியும். அந்த அளவுக்கு வல்லமையுள்ள மனுஷன் அவர். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கிபடிப்படியாக உயர்ந்து முதலாம் தர பாடசாலை அதிபராக பத்து வருடங்கள் ஊரில் பணிபுரிந்த பின்னர் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறார். அவரது மனைவி பூமணி டீச்சரும் குறைந்தவரில்லை. ஆரம்ப பாடசாலை ஒன்றின் தலமை ஆசிரியர். அத்துடன் ஊரிலுள்ள மாதர் சங்கத்தின் நிரந்தர தலைவியும்கூட! 

 

எதிலீன் ஹோமோன் வாயு

ஆசி கந்தராஜா

 -1-

ரவணை அம்மான் தூக்கில் தொங்கிச் செத்தபோது எனக்கு பதின்மூன்று வயது. இராசதுரை, நான், சரவணை அம்மானின் ஒரே மகள் பூங்கொடி எல்லோரும் அப்போது ஊர்ப் பாடசாலையில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தோம். சரவணை அம்மான் தூக்கில் தொங்கிச் செத்தவரோ அல்லது அவரை அடித்துத் தூக்கினதோ...? என்ற சமசியம், அப்போது பலருக்கு இருந்தது. இதுபற்றி ஊரிலே ஆரென்ன சொன்னாலும், சந்தையால் வந்த சரவணை அம்மான், அன்று பெண்சாதியுடன் சண்டை பிடித்ததை, நான் பார்த்தேன். இந்தச் சண்டை வெறும் வெண்டிக் காயால் வந்தது.

 தலைமுறை தாண்டிய காயங்கள்

ஆசி கந்தராஜா

 

றூத் என் அலுவலக அறைக்கு வந்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான்.

'மிக நல்ல செய்தி சேர், கேள்விப்பட்டீர்களா...?' என்றான் பரபரப்புடன்.

அவசரமாக நடந்து வந்த களைப்பில் மேல் மூச்சு வாங்க, இணையத் தளத்தில் தான் வாசித்த தகவலைச் சொல்லி, அதற்குச் சாட்சியாக தனது 'ஐபாட்' அலைபேசியிலுள்ள 'இணைய' செய்தியையும் காண்பித்தான்.          

'இலட்சக் கணக்கான ஆர்மேனிய மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையென்றும் (Genocide) அதனை மறுப்பது குற்றச் செயல் என்றும் கூறும் சட்டமூலத்தை, அன்று காலை (22 டிசம்பர் 2011) பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது. இதற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்ய, துருக்கி தன்னுடைய தூதுவரை பாரீஸிலிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளது...' என அந்தச் செய்தி தொடர்ந்தது.

 சாது மிரண்டால்...!

ஆசி கந்தராஜா

கிராமசேவகர் மாமா, பேர்த்சேட்டிபிக்கற் (Birth certificate) வந்திட்டுதோ? எனக்கேட்டு, வழமை போல எனது அலுவலகத்துக்கு வந்திருந்தான் நாராயணன்.

நடந்து வந்த களைப்பினால் அவனுக்கு மூச்சு வாங்கியது. பிறப்பிலேயே நாராயணனுக்கு கால் ஊனம். இருந்தாலும் நல்ல மாற்றுத் திறனாளி. கண் பார்த்ததை, அவனது கை செய்யும். தோட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்கள், பழுதா? கூப்பிடு நாராயணனை, என்னுமளவுக்கு ஊரிலே அவன் பிரசித்தம். அவனுக்கு ஆதரவாய் வாழ்ந்த பாட்டிக் கிழவியும் இறந்துவிட, மெசின் திருத்தப் போகுமிடத்தில் சாப்பாடுவான். இல்லையேல், இருக்கவே இருக்கிறது கதிரேசு கடை ரொட்டியும், வாழைப் பழமும், தேத்தண்ணியும்.

'கார்த்திகை மாசத்தோடை உங்களுக்கு பென்சன்எண்டு கேள்வி, அதுக்கு முதல் பேர்த்சேட்டிபிக்கற்ரைஎடுத்துத் தாங்கோ' என மீண்டும் நச்சரித்தான், நாராயணன்.

 கையது கொண்டு மெய்யது பொத்தி

ஆசி கந்தராஜா

 

ந்தச் சிறுவன் எந்தவித சலனமுமின்றி நின்றான். பதினைந்து வயதுக்கு மேல் இருக்காது. கைகள் குருதியால் நனைந்திருந்தன. அவனருகில் நடுங்கியபடி அவள். பத்து வயது மதிக்கலாம். வயசுக்கு மீறிய வளர்ச்சி அவள் உடலில் தெரிந்தது. வயிற்றிலும் மார்பிலும் கசிந்த இரத்தம், கிழிந்து தொங்கிய அவளது சட்டையூடாக வடிந்து கொண்டிருந்தது. அந்த அதிகாலை வேளையிலும், சிரிய அகதிகளும் லெபனானியர்களும் சிறுவர்களைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். பொலீஸ்காரன் ஒருவன் அலைபேசியில் தகவல் சொல்லிக் கொண்டிருந்தான்.

லெபனான் தலைநகர் பெய்ரூத்திலுள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்துக்கு முன்னே, மத்தியதரைக் கடற்கரையோரம், காலையிருந்து மாலைவரை அகதிச் சிறுவர்கள் றோசாப் பூ விற்பார்கள். இவர்களுக்கு நிரந்தர இருப்பிடமோ முகவரியோ இல்லை. சிவப்பு றோசாக்கள் காதலின் சின்னமாகையால், மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் அவை அமோகமாக விற்பனையாகும். பெரும்பாலான அகதிச் சிறுவர்கள் பூ விற்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பிச்சை எடுப்பார்கள், அசந்தவர்களிடம் 'பிக்பொக்கற்' அடிப்பார்கள். பெய்ரூத் நகர பொலீசாருக்குப் பாரிய தலையிடியாக இருக்கும் இவர்கள், குற்றம் செய்து பிடிபட்டால் நேரடியாக சிறுவர்கள் தடுப்பு முகாமுக்கு அனுப்பப் படுவார்கள்.

 எதிரியுடன் படுத்தவள்

ஆசி கந்தராஜா

மேற்குச் சுவர் என்னும் வெயிலிங் வால்...!

யூதர்கள் வயது வித்தியாசமின்றி அந்தச் சுவரில் தலையை முட்டிப் பிரார்த்திக்கிறார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பிள்ளையார் கோவிலில் குட்டிக்கும்பிட்ட பழக்கத்தில் நானும் மூன்று முறை சுவரில் முட்டிப் பிரார்த்திக்கிறேன்.

மன்னர் தாவீதும், அவரின் மகன் சாலமனும் கட்டிய தேவாலயங்கள், தொடர் படையெடுப்புக்களால் சிதைக்கப்பட, யூதர்களின் கோயிலில் மிஞ்சியது, இந்த ஒற்றைச் சுவர் மட்டுமே. 'நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று காட்டுவதற்கு கடவுள் விட்டு வைத்திருக்கும் ஒற்றை அடையாளமாக யூதர்கள் இதை நினைக்கிறார்கள். இதனால் வாழ்வில் ஒருமுறையேனும் சுவரைத் தரிசித்து, முட்டிக்கொண்டு அழுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

 சாத்திரம் உண்டோடி?

ஆசி கந்தராஜா

 

சுந்தரமூர்த்திக்கு இருப்புக் கொள்ளவில்லை.

உண்மையாகவே அது நடந்து விட்டால் என்னசெய்வது என்கிற பயம் அவரை வாட்டியது. இந்த அவதியில் நாலுதடவைகளுக்கு மேல், அலுவலகத்தில் இருந்து, மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அதுபற்றிக் கேட்டுவிட்டார். தொலை பேசியின் மறுமுனையில், மனைவி சூடான எண்ணையில் போட்ட கடுகாக வெடித்தாள்.

நான் சொல்லுறதைக் கேட்டால் ஏன் இந்தப்பாடு? வைச்சுக் கொண்டிருங்கோ. ஊர்ச்சனம் குண்டியாலை சிரிக்கப் போகுது’ என்கிற வார்த்தைகளை இணைத்துப் பொரிந்து தள்ளினாள்.

கடைசி இரு முறையும் சுந்தரமூர்த்தியின் குரலைக் கேட்டதுமே, மௌனமே பதிலாகச் சடக்கென தொடர்பைத் துண்டித்து விட்டாள்.

 ஆண் சுகம்

ஆசி கந்தராஜா

-1-

ரவு இரண்டு மணி இருக்கும். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மனைவி மோனிக்காவுடன் வந்திருந்தார் ஜேம்ஸ். அவரின் முகம் இறுகிக் கறுத்திருந்தது. மோனிக்காதான் விஷயத்தைச் சொன்னார்.

'ரோனி இறந்து விட்டதாக தகவல் வந்திருக்கிறது. நடந்தது விபத்து, என்பதை எங்களால் நம்ப முடியவில்லை' என்ற மோனிக்கா, கண்களில் திரண்டிருந்த கண்ணீரை மறைக்க, கழுத்தில் கட்டியிருந்த மவ்ளரை அவிழ்த்து முகத்தைத் துடைத்தார். ஜேம்ஸ் மனைவியைச் சமாதானப்படுத்த முயன்றாலும், அவரின் கண்களிலும் கண்ணீர் கரைகட்டி நின்றது.

இரவு நேரத்தில் ஜேம்ஸ் கார் ஓட்டுவதில்லை, கண்பார்வை குறைவு.  ஆனாலும், அந்த அகால வேளையில் விபத்து நடந்த இடத்துக்குப் போக வேன்டுமென இருவரும் அடம்பிடித்தார்கள். ரோனியின் உடல் அந்த இடத்தில் இருக்கப் போவதில்லை. பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருப்பார்கள். இருந்தபோதிலும் அவர்களைத்  திருப்திப்படுத்த எனது காரில் விபத்து நடந்த இடத்துக்குப் போனோம். ரோனியின் கார், வீதி ஓரத்து மின் கம்பத்துடன் மோதி நொருங்கிக் கிடந்தது. போலீசார் விபத்து நடந்த இடத்தில் கோடுகள் கீறுவதும் படமெடுப்பதுமென சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

கலியாண கெமிஸ்றி 

(வேதியின் விளையாட்டு)

ஆசி கந்தராஜா

து சரிவராது போலத்தான் இருக்குஎன்ற மனைவியின் பதிலால் பென்னம்பலம் மனமுடைந்து போனார். இந்த அளவுக்குச் சிக்கலாய் விஷயம் இருக்குமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் சம்பாதித்துள்ள குடும்ப செல்வாக்கிற்கும் கௌரவத்துக்கும், இது வெகு சுலபமாக நடக்க வேண்டியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது!

பொன்னம்பலத்தார், வாழ்கையை எப்படியும் வாழலாமென்று வாழ்பவரல்ல. அவருடைய வாழ்க்கையில் எப்போதும் ஓர் ஒழுங்கு முறை இருக்கும். வளவிலுள்ள மரங்கள் தொடக்கம் வீட்டிலுள்ள மனிதர்கள்வரை ஒருவகைக் கட்டுப்பாட்டுக்குள் வளரவேண்டுமென்று எதிர்பார்ப்பார். தனது குடும்பத்தில் பத்து வருஷங்களுக்குப் பின்னர் நடக்கப்போகும் விஷயங்களையும் இப்போதே தீர்மானித்துத் திட்டமிட்டுக்கொள்வது அவரது சுபாவம். இதுதான் அவரது பலமும், பலவீனமும்!

படுக்கையில் புரண்டு படுத்தார் பென்னம்பலம்.

 காதல் ஒருவனைக் கைப்பிடித்து…!

ஆசி கந்தராஜா

ந்த இளைஞன் அவர் முன் அமர்ந்ததும் வீரசிங்கம் மலைத்துப் போனார். தன் முன்னால் இருந்த மடிக் கணனியில் அவனது விபரங்களைத் தட்டிப் பார்த்தார். தந்தை பெயர் அமீர் முகம்மது, தாய் றொஸ்நாக். தந்தையின் பிறப்பிடம் ஈரான், ஆனால் இளைஞன் சிட்னியில் பிறந்ததாக தரவுகள் சொல்லிற்று. பதினெட்டு வருடங்களுக்கு மேலாக பேராசிரியர் வீரசிங்கத்தின் மனதை அலைக்கழித்த கேள்விகளுக்கு, அத்தகவல்கள் விடையாக அமைந்தன.

ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில், பன்னிரண்டாம் வகுப்பில் அதிகூடிய புள்ளிகள் எடுத்த அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மேலதிகமாக, மருத்துவப் படிப்பிற்கென பரீட்சை எழுதி, நேர்முக பரீட்சையிலும் சித்திபெற வேண்டும். மருத்துவம் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு புனிதமான தொழில். மருத்துவம் படிக்க வருபவருக்கு அதில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டா எனப் பரீட்சிக்கும் நெறி முறைகளே இவை. இப்படியான நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கே, சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அந்த இளைஞன், பேராசிரியர் வீரசிங்கத்தின் முன் அமர்ந்திருந்தான். பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், அமீர் முகம்மது பேராசிரியடம் ஆராய்ச்சிப் படிப்புக்காக சிட்னி வந்தபோது எப்படி இருந்தானோ அப்படியே, ‘அச்சொட்டாக’ அந்த இளைஞனும் இருந்தான்.

 இந்துமதி ஆகிய நான்...!

ஆசி கந்தராஜா

ற்றவர்கள் என்னைப் பற்றி ஒரு மாதிரியாகப் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இது குறித்து எனக்கு எந்தக் கவலையும் குழப்பமும் இல்லை. கையில் இருக்கும் அழுக்கை, கழுவிவிட்டுப் போவதில்லையா? அதுபோல அநியாயங்களையும், துரோகங்களையும், ஊதித் தள்ளி விட்டு நான், நானாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்துமதி என்னுடைய பெயர். வசதியான, கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள். கட்டுப்பாடு என்றால் அப்படி ஒரு அநியாய கட்டுப்பாடு. அப்பா சந்திரசேகர், நிர்வாக அதிகாரியாக அரசாங்கத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். இப்பொழுது முழு நேரமாக வீட்டில் அதிகாரம் செய்கிறார். அவர் சிரித்த நேரங்கள் குறைவு. முகத்தை எப்பொழுதும் சீரியஸ்ஸாக வைத்துக் கொள்வதால், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பலருக்கு, அவருடன் பேசுவதற்குப் பயம். தன்னை எதிர்த்துப் பேசாதபடி உளவியல் ரீதியாக, என்னையும் அம்மாவையும், வீட்டில் தயார்ப் படுத்தி வைத்திருந்தார்.  அவர் செய்த ஒரே ஒரு நல்ல காரியம், என்னைப் பல்கலைக் கழகத்தில், அறிவியல் படிக்க விட்டதுதான்.

 ஆண் குழந்தை

ஆசி கந்தராஜா

ரணக் கடல், வழமைக்கு மாறாக இன்று அமைதியாக இருக்கிறது. அக்னி வெய்யில். உக்கிரமாக வீசும் உப்புக் காற்று அனல் வெக்கைக்குப் போட்டியாக முகத்திலடிக்கிறது. காது கன்னமெல்லாம் ஒரே எரிச்சல். வாயில் உப்புக் கரிக்கிறது. உடம்பு முழுவதும் கடல் சேற்றைப் பூசிக்கொண்டு அரைநிர்வாண கோலத்தில் வெள்ளையர்கள் குடைகளின் கீழே படுத்துக்கிடக்கிறார்கள். மரணக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள தாதுப் பொருள்கள், தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறதாம். இதற்காகவே ஜேம்ஸ் தன்னுடைய மனைவி மோனிக்காவுடன் மரணக் கடலுக்கு வந்திருகிறார்.

கடற்கரை ரம் தன்னிச்சையாக வளர்ந்த பேரீச்சை மரங்களும் தாளை மரங்களும் இலை கருகி வாடிச் சோர்ந்து நிற்கின்றன. இடையிடையே உவர் மண்ணுக்கும் உப்புத் தண்ணீருக்கும் இயைந்து வாழும் ஒலிவ் மர இனங்கள் உல்லாசிகளுக்கு நிழல் கொடுக்கின்றன. ஒலிவ் மரங்கள் ஊடாகப் பார்த்தால் ஜோர்டான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை நெளிந்து விரிவது தெரிகிறது.

 முகமூடி மனிதர்கள்

ஆசி கந்தராஜா

ந்த நிகழ்வு, முன்னும் பின்னுமாக ஏராளமான நினவுச் சுவடுகளைக் கோத்துக் கொண்டு என் முன்னே எழுந்து நின்றது. ஒரு போதும் என்னால் நேற்றைக்குள் போகமுடியாதென்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அதை நான் எதற்காகச் செய்தேன்? அதற்கான  காரணம் என்ன? என்ற கேள்விகள், சிந்தனையைக் கலைத்துப் போட்டு என் மன நிம்மதியைக் கெடுக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத் தமிழன் நான். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தம்பலகாமம் கிராமத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவுக்கு தம்பலகாமத்தில் அதிகமான நெல் வயல்கள் இருந்தன. கிராமத்தின் விவசாய சங்கத் தலைவரும் அவர்தான். பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தால் அப்பா என்னை திருகோணமலையிலுள்ள பாடசாலையில் சேர்த்துவிட்டார்.

பாடசாலை விடுதியிலேயே தங்கிப் படித்தேன். என் வாழ்க்கையில் அற்புதமான அநுபவத்தை அருளிய நாட்கள் அவை. படிப்பும், விடுமுறைக்கு வீடுமென மகிழ்ச்சியாக வாழ்ந்த காலமது. பத்தாம் வகுப்பில் எல்லாப் பாடத்திலும் அதிவிசேஷ சித்திகள் பெற்று மாகாணத்திலேயே முதலாவதாக வந்தேன். தம்பலகாமம் கிராமமே என்னைக் கொண்டாடியது. உள்ளூர் பத்திரிகையில் என் படத்துடன் செய்தியும் வெளிவந்தது. பதினொராம் வகுப்பு முடிந்து நான் பன்னிரண்டாம் வகுப்புக்குச் சென்றபோதுதான் எங்கள் வீட்டிலே அந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. நினைக்கவே திகிலடிக்கிற மிகக் கொடூரமான நிகழ்ச்சி அது.

 அந்திமம்

ஆசி கந்தராஜா

ம்மாவிடம், ஒரு கொட்டைப் பெட்டி இருந்தது. அதைச் செல்வச்சந்நிதி கோவில், தேர்த் திருவிழாவின் போது வாங்கியதாக ஞாபகம். அது, பனம் சார்வோலையால், தட்டையாக, தனியான மூடியுடன் பின்னப்பட்டு, பல வர்ணங்களில் சாயம்போட்ட குருத்தோலையால் பொத்தி, அழகு படுத்தப்பட்டிருந்தது. அம்மா வாங்கிய கொட்டைப் பெட்டியில், ஒன்றுக்குள் ஒன்றாகச் செருகப்பட்ட நான்கு அறைகள் இருந்தன. அதன் உட்பகுதியில் சில்லறைகளும், பக்கவாட்டில் தாள் காசும் வைத்திருந்தார்.

அம்மா கணக்கில் கெட்டிக்காரி. பெரிய நெடும் பிரித்தல் கணக்கையும் சில நொடிகளில் மனதுக்குள் போட்டுவிடுவார். எத்தனையோ பணப் பிரச்சனைகளை, தனி ஆளாக எதிர் நோக்கிச் சமாளித்தவர். அவர் கருமியல்ல. எங்கே காசைப் பொத்திப் பிடிக்கவேணும், எங்கே விரிக்கவேணும், என அவருக்குத் தெரியும். ஆனால், வயோதிபம் வந்து, அவரது இயக்கம் தானாகக் குறைந்தபோது, காசு விஷயத்தில் அம்மாவிடம் எவ்வளவோ பெலவீனங்கள்!

.