சொல்லித் தெரிவதில்லை
இலக்கியக்கலை
- மு பொ -
(20 March 2022 தினக்குரல்)
சென்றவார ( 13 march 2022 ) தினக்குரலில் புனைகதை
வெளியில் புதிய எல்லையைத் தொடும் பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு என்ற
தலைப்பில் புலோலியூர் ஆ .இரத்தினவேலோன் எழுதிய கட்டுரை ஆசி கந்தராஜாவின் இலக்கிய பங்களிப்பை
முழுமையாக அறியாத பலருக்கு பேருதவி செய்வதாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
சென்ற ஆண்டு அவர் கொழும்பு வந்திருந்த போது
என்னையும் வந்து சந்தித்து தனது நூலொன்றையும் தந்தது எழுத்தாளர்களுக்கு இருக்க
வேண்டிய பரந்த மனப்பான்மையையும் அன்பையும் காட்டுவதாய் இருந்தது. பின்னர் அவரைக்
கெளரவிக்கும் முகமாக 'ஞானம்' சிற்றிதழின் ஆசிரியர்
கொழும்புத் தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டி கெளரவித்தார். இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்திருந்த எழுத்தாளர் ஒருவர்
ஆசி கந்தராஜாவிடம் ஈழத்தமிழர் மேற்கொண்ட விடுதலைப் போராட்டம், அதனால் ஏற்பட்ட அனர்த்தங்கள் பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை?
என்ற கேள்வியொன்றை முன்வைத்தார்.
அது அவசியமான நல்ல கேள்வியாகவே இருந்தது. அதற்கு அவர், நான் எதிர்பார்த்தது போலவே எனக்கு அதில் அனுபவம் எதுவுமில்லை அதனால் எழுதுவதுமில்லை என்றார்.