அறிவியல் புனைகதை:
வைரஸ் புராணம்
எங்கள் வீட்டில், ஒரு எலுமிச்சை நின்றது.
வருடம் முழுக்கக் காய்க்கும். விதைகள் இல்லை, நல்ல புளி. திடீரென அதன் இலைகள் வெளிறிச் சுருண்டு, பட்டை வெடித்து, காய்ப்பதை நிறுத்திக்
கொண்டது.
எலுமிச்சைக்கு வைரஸ் நோய் (CTV) என்பதை உறுதி செய்து கொண்டேன். தாமதிக்காது மரத்தை வேருடன் பிடுங்கி எரித்து விட்டேன்.
மனைவிக்கோ அது பெரும் கவலை. அது அவள் ஆசை
ஆசையாக, பண்ணையில் வாங்கி, நட்டுவளர்த்த மரம்.
எல்லாத்துக்கும் மருந்தடிக்கிறியள் எலுமிச்சைக்கு
மருந்தடிக்கேலாதோ? எனப் புறுபுறுத்தாள்
மனைவி.
தாவரத்தையோ அல்லது மனிதர் உட்பட விலங்குகளையோ
தாக்கும் வைரஸ் கிருமிகளுக்கு
மருந்தில்லை என்றேன் மொட்டையாக.
என்ன சொல்லுறியள்? உலகமே கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்க, கங்கணம் கட்டிக்கொண்டு ஆராச்சியில் இறங்கியிருக்குது. நீங்கள் வைரஸ் கிருமிக்கு மருந்தில்லை என, புதுக்கதை சொல்லுறியள் என்றவாறே என் முன் வந்தமர்ந்தாள் மனைவி.